கர்த்தாதி கர்த்தனை
ராஜாதி ராஜனை
நான் கெம்பீரித்து பாடுவேன் (2)
துதிப்பேன் பாடுவேன் மகிழ்ந்திடுவேன்
அன்பரின் பாதத்தில்
அமர்ந்திடுவேன் - கர்த்தாதி
1. எனக்காக யாவற்றையும்
செய்து முடிப்பார் அவர்
கர்த்தரை தேடிடுவேன் என்றும்
எனக்கொன்றும் குறைவில்லையே - துதி
2. கர்த்தரை நம்பிடுவேன்
சகலமும் நன்மையாகும்
வாக்குத்தத்தம் செய்தவர் - அவர்
வாக்கொன்றும் மாறிடாதே - துதி
3. கோழி தன் குஞ்சுகளை
கூட்டி அணைப்பது போல்
சேதம் வராமல் என்னை
அவர் செட்டையில் காத்திடுவார்- துதி
4. அழுகையின் பள்ளத்தாக்கை
நீருற்றாய் மாற்றிடுவார்
பரலோகில் வாசல் ஒன்றை - அவர்
எனக்காக திறந்திடுவார்
HOME
More Songs